இலங்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக சமிந்த பதிராஜவை நியமிக்க அனுமதி

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பதவிக்காக முழுநேர பதில் கடமையாற்றும் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவரை நிரந்தர அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிப்பதற்கென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…