இலங்கை

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று மீட்கப்பட்ட 11 வயது மாணவன் பலி

காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

அங்கிருந்த பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து அடித்துச் செல்லப்பட்ட ஐந்து சிறுவர்களை மீட்டிருந்தனர். 

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் லேடி ரிட்ஜ்வே (Ridgeway) சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய மற்றுமொரு மாணவனைத் தேடி, பொலிஸ் உயிர் காப்பு அதிகாரிகளும் கடற்படை சுழியோடி குழுவினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கோட்டை பொலிஸ் நிலையத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…