இலங்கை

பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதித் தள்ளிய வேன்

விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது ​​வேன் ஒன்று மோதியுள்ளது. 

பாணந்துறை திசையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, வஸ்கடுவ – வாடியமன்கட பகுதியில் நேற்று இரவு (22) இவ்வாறு ​​வேன் மோதியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வேன் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…